பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பில் தகவல் வழங்கிய நான்கு வயது மகள்!


கொழும்பு, ஷங்கரில்லா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பயங்கரவாத தலைவராக மொஹமட் சஹ்ரானின் நான்கு வயதான மகளிடம் பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை சாய்ந்தமருதில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் சஹ்ரானின் மனைவி மற்றும் குழந்தை காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் இவர்கள் விசாரணைகளுக்காக கடந்த 8 ஆம் திகதி கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த விசாரணையில் ஷஹ்ரானின் நான்கு வயதான மகள் கூறும்பொழுது, வாப்பாவின் பெயரை கூறமாட்டேன். வாப்பாவின் பெயரை சொன்னால், என்னுடைய காதுகள் இரண்டையும் வாயையும் வெட்டிவிடுவதாக வாப்பா சொன்னார்.

தௌஹீத் ஜமாஅத் பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைள் தொடர்பில் சஹ்ரானின் மனையான அப்துல் காதர் பாதிமா சாதியா என்பவர், மிக முக்கியமான தகவல்கள் பலவற்றை ​விசாரணைப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் காயமடைந்த இவ்விருவரும் சஹ்ரானின் மனைவி மற்றும் குழந்தையென, சஹ்ரானின் சகோதரியும் ச​கோதருமே பாதுகாப்பு தரப்பினரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

தடுத்துவைக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவி மற்றும் பிள்ளையிடம், குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவினர் ​ஒவ்வொரு நாளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share on Google Plus

About Nelli kuddy

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment