நான் சுட்டே பிரபாகரன் இறந்தார்.! "டக்ளஸின் பட்டாசு வெடி"


எமக்கு கிடைத்த தகவல்களின் படி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என, முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் இரண்டாவது ஊடகவியலாளர் மாநாடு இன்று 30.05.16 நடைபெற்றது.
இதன்போதே டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் பிரபாகரனின் மரணச் சான்றிதல் இன்றும் வழங்கப்படவில்லை என்ற கருத்தை வௌியிட்டிருந்தார். இது குறித்து இன்று ஊடகவியலாளர் ஒருவர் முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், விஜயகலா மகேஸ்வரன் அரசியல் சுயலாபம் கருதியே இவ்வாறான கருத்துக்களை வௌியிடுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விஜயகலாவின் கணவர் மகேஸ்வரனை கொலை செய்தமை தொடர்பான மரபணு (DNA) பரிசோதனை கொலையாளியுடன் பொருத்தப்பட்டதாகவும் அதனையும் மூடிமறைப்பது போன்றே அவரது கருத்துள்ளதாவும் டக்ளஸ் தேவானந்தா இதன்போது கூறினார்.
அத்துடன், தான் அமைச்சராக இருந்த போது யுத்தத்தை நிறுத்துவது குறித்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும், குறிப்பாக அரசாங்கத்துடன் பேசியதோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுடன் இது குறித்து பேசியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் அவர்கள் இதற்கு முறையாக ஒத்துழைக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Share on Google Plus

About சாணக்கியன்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment